Tuesday 14 February 2017

திரும்பி வா சகியே

காழ் மனம் கொண்டவள் உன்னை
கண்ணீரில் அரியும் முன்
களூரிற்கு பறந்தாயடி கண்ணம்மா
காலத்தில் ஓர் தடம் பதிய வேண்டும்
திரும்பி வா சகியே

உன் மனா தெரிகையில்
என் மனம் கவர்ந்தாய்
இருள் மறை பூனையாய்
தேடி உன்னை தொலைக்கிறேன்
திரும்பி வா சகியே

வாட்ஸ்பில் சண்டையிட்டு
ஸ்மைலியாய் மறையும் என் நிலவே
கோளோடு யுத்தம் கொண்டு
கிரகணமாய் மறையாதே
முழு இரவும் நமக்கென விழித்திருக்கும்
திரும்பி வா சகியே

உன்னோடு கழித்த பொழுதினில்
என்னை நான் மீட்டெடுத்தேன்
இதயத்தின் காயம் வழியே
குருதியாய் வழிந்தோடினாய்
காயங்கள் ஆறுமுன்
கானலாய் கரையாதே
திரும்பி வா சகியே

எத்தனை வர்ணனை தீர்த்த பின்னும்
துளிர்க்கும் காதலாய்
வடிக்கும் வரிகள் உனக்கெனவே பிறக்கிறது
என் வாசகியே

No comments:

Post a Comment