Friday 11 September 2015

காதல் பொழுதுகள்


உறக்கம் விலகாத
ஆதிகாலை ஞாயிறு

அடுப்பங்கரையில் நம் கதை பேச
தவித்து கொண்டிருக்கும் தேனீர்
முன்புற சிமிழிலில்
அழகாய் சிரிக்கும் குங்குமம்
பின்னால் வந்து அணைக்கையில்
கொஞ்சம் இறுக்கமாய் மல்லிகை வாசம்

மிளா நினைவுகளின் நிலை கோடென
ஒற்றை காதல் விண்ணப்பம்
"எங்கேயும் கூட்டி செல்லேன் காதல் கணவா"

பனித்திரை கிழித்து சென்றது
நம் கனவு வாகனம்
சிறு குன்றின் காதல் வெளியில்
இருவரின் இதமாய் ஒற்றை சால்வை

நிறை மாத மேகத்தின் நிழலில்
சிறு விரல் ஸ்பரிசம் தூரல்களாய்
தூரத்து பச்சையின் எல்லைகள் குறித்தோம்
மறுமுறை பதிக்கும் தடங்களாய்

கூடலுடன் ஊடல் கலைந்தபின்
அந்தி பொழுதில் விடை பெற்றோம்
நாளைய நகரத்து வாழ்க்கையை நோக்கி

3 comments: