என்னவளே
என்றேனும் ஓர் நாள்
உன்னோடு பேசிட வேண்டும்.
முதன் முதலாய் கடற்கரையில்
நட்பினை கேட்டிருக்க வேண்டும்
என்னோடு கைக் கோர்த்து வாயென
மறுமுறை மனம் திறந்திருக்க வேண்டும்.
எதிரெதிரே இரயில் பிரியும் இடத்தில்
நாமிருவரும் இணைந்து பேசிருக்கலாம்
பேருந்து நிறுத்தமதில்
பிரிவுனை அணைத்த கையோடு
தோழியே துணைவியாக வேண்டிருக்கலாம்.
நீ கழித்த நொடியினில்
நான் வாழ்ந்து பார்த்திட
நமக்காய் நேரம் கூட பின்னோக்கி செல்கிறதோ?
உன் பாதை தேடி
என் தடம் பதிந்திட
கடற்கரை மணலாய் காதலும் சேர்கிறதோ?
என்னை பார்க்கும் பொழுதெல்லாம்
அடை மழை பொழிவதேனோ?
பொழியவில்லை எங்கும் என்பாய்.
எங்கே பொழிவில்லை?
மண்ணிலா? மங்கையின் கண்களிலா?
என் வலிகளுக்கு உறக்கம் உண்டெனில்
உன் மடியினில் உறங்க சொல்லியிருப்பேன்
நமது தூரமது காதிகமெனில்
கவிதைகள் எழுதி நிரப்பிருப்பேன்.
நான் தினமும் கடக்கும் சாலையில்
பசியோடு ஒருவன்
பழம் விற்று கொண்டிருக்கிறான்
எத்தனை காதல் உள்ளிருந்தென்ன காதலியே
உன் நெற்றி முத்தம் இன்னும் காத்திருக்கிறதே.
தனிமை இரவுகள்
எப்பொழுது விடியுமென
கனவுகளில் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
என்றேனும் ஓர் நாள்
உன்னோடு பேசிட வேண்டும்.
முதன் முதலாய் கடற்கரையில்
நட்பினை கேட்டிருக்க வேண்டும்
என்னோடு கைக் கோர்த்து வாயென
மறுமுறை மனம் திறந்திருக்க வேண்டும்.
எதிரெதிரே இரயில் பிரியும் இடத்தில்
நாமிருவரும் இணைந்து பேசிருக்கலாம்
பேருந்து நிறுத்தமதில்
பிரிவுனை அணைத்த கையோடு
தோழியே துணைவியாக வேண்டிருக்கலாம்.
நீ கழித்த நொடியினில்
நான் வாழ்ந்து பார்த்திட
நமக்காய் நேரம் கூட பின்னோக்கி செல்கிறதோ?
உன் பாதை தேடி
என் தடம் பதிந்திட
கடற்கரை மணலாய் காதலும் சேர்கிறதோ?
என்னை பார்க்கும் பொழுதெல்லாம்
அடை மழை பொழிவதேனோ?
பொழியவில்லை எங்கும் என்பாய்.
எங்கே பொழிவில்லை?
மண்ணிலா? மங்கையின் கண்களிலா?
என் வலிகளுக்கு உறக்கம் உண்டெனில்
உன் மடியினில் உறங்க சொல்லியிருப்பேன்
நமது தூரமது காதிகமெனில்
கவிதைகள் எழுதி நிரப்பிருப்பேன்.
நான் தினமும் கடக்கும் சாலையில்
பசியோடு ஒருவன்
பழம் விற்று கொண்டிருக்கிறான்
எத்தனை காதல் உள்ளிருந்தென்ன காதலியே
உன் நெற்றி முத்தம் இன்னும் காத்திருக்கிறதே.
தனிமை இரவுகள்
எப்பொழுது விடியுமென
கனவுகளில் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.