Tuesday, 13 March 2018

உறங்கும் தேவதை

நாம் இருவரும் கூடும்
இரவு பொழுதில்
என்னை விடுத்து
விளக்கை அணைக்க சொல்கிறார்
உன் தந்தை

செல்லமாய் உன்னை சீண்ட
சினம் கொண்டு நோக்காதே
நேரலையில் நெஞ்சில் காயம்
உன் மூக்குத்தி

முன் விழும் முடிகளை
பின் தள்ளி விடாதே
ஒதுங்கும்  முடியில்
ஒளிந்திருக்கும் அழகால்
மூச்சு நின்று விடுகிறது

நெற்றியில் வைக்கும் குங்குமமாய்
குடியிருக்கும் இதயத்தை
அவ்வப்போது தீற்றாதே
இராமன் தொட்ட அகலிகையாய்
உயிர்ப்பிக்கிறது கவிதைகள்

மனதை சிறை கொண்ட
தனிப்பெண் உன்னை கவர
வார்த்தை தேடி தவிக்கிறது சிரை
படித்த உடன் பகிர மாட்டாய் மனதை
அலைப்பேசி அழைக்க காத்திருந்து
இம்முறை வலிக்கும் இதயம்

மறுமுறை உன்னை பார்க்கும் முன்
நூறு கவிதைகள் முடித்தாக வேண்டும்
எழுத்தையும் ஆணையும் சூடிய பின்
உன் விழியின் முன்
கூரிழந்து நிற்கும் என் எழுத்தாணி .










Sunday, 11 March 2018

ஒளிச்சேர்க்கை

A short poem on daylight saving dedicated to my wife -Deepika

அன்பார்ந்த காதலே உனக்கொரு மடல்.

அலைப்பேசியில் அளவளாவும் பொழுது
அதிகாலை 1.59 மணியின்
பின்வரும் நொடி மூன்றென ஒலித்தது.
இரு கண்ணிமை பொழுதினில்
இரண்டரை நாழிகையும்
இரண்டற கலந்திடுமா?
ஐன்ஸ்டீனின் சார்பியலில்
காதலும் சார்ந்திடுமா?
காலை ஒளிச்சேர்க்கையில் காதலாகி
தேநீர் கோப்பையில் கலந்திடுவோமா?
நாமிருவரும் ஈரிண்டென நல்கி
பிரிந்திருந்த காலம் தனை
ஒடுக்கற்பிரிவில் இணைத்து
ஒர் உயிரினில் பிணைந்திடுவோம்.