Tuesday, 19 May 2015

தீரா காதல்

என்னுள் யாவுமாய் கலந்த என்னவளே..
 நான் உன்னவனாக காத்திருக்கிறேன்..

மேகத்தின் நீர் துளிகளை
     கலைகின்ற மழையினை போல்
கணத்தின் நிமிட துளிகளை
  கலைக்கிறதோ மௌனம்

இரவியனுடன் மதியவள்
  தழுவி செல்லும் வேளையில்
காலம் முழுதிற்கான
 கதை பேசிகொண்டிருப்போம்
என்றும் தீரா காதலுடன்.....

பி.கு.
இரவியன்- சூரியன்
மதி- நிலா
மேலே குறிப்பிட்ட காலம் - சூரியனும் நிலவும் தழுவி செல்லும் மாலை வேளை