Tuesday 10 January 2017

(மகா) கவி

மகாகவி ஆக
எத்துணை காலம் வேண்டும்?
தெரியவில்லை ....
அவளுக்கென்று
காத்திருந்த கணங்களை
எண்ணிவிட்டு சொல்கிறேன்

Saturday 7 January 2017

கற்பனை தோழி

சகடதின் சாளரம் ஓரம்
மெலிதாய் இழைந்தோடும்
இளவேனிற் சாறல்

நெரிசல் சிறையில்
சிக்குண்ட  என் காடியின் எதிரே
குளிரின் இதமாய் போர்த்திட
ஒரு உடை ஈர் உடல்
பெரு மழை தவிர்த்திட
குடையினை தழுவிம் நாற் கரங்கள்
மற்றும்
காதலின் தடுமன் தீர
கணக்கில்லா முத்தங்கள்.

தனிமையின் துவீபமான
என் குறை தீர
கற்பனை தோழி ஒருத்தி வந்தாள்
தன்னை யாதென வியக்கும்
மாமல்லன் மனங்கவர் சிற்பமவள்.

ஏ தோழியே!
கற்பனை உலகில்
தன் பலம் தந்தாய்
உன் மொழி கேட்க
தன் மடல் உள்ளது என்றாய்
தனிமை என்றோர் மாயை
அது நம்மிடம் இல்லையென
கரம் கொடுத்தாய்
கணம் பொழுதும் உன்னொடென
கணை அளித்தாய்
நினைவில் எங்கே துறக்கிறாய்?

நித்தம் உன்னோடு வாழ்த்திட
அடைக்காக்கும் என் இரவுகள்
உன்னிடம் சொல்வதிற்கென
பல புனைவுகள் இருக்கிறது
உன்னிடம் தீர்த்து கொள்ள
பல யுத்தங்கள் இருக்கிறது
உன்னோடு களிக்க
பல அதிசயங்கள் இருக்கிறது.

மற்றோர் திகதி உன்னோடென்று
கனவில் மறக்கிறாய் நேற்றோடு
உன் சிறகு விரிய காத்திருக்கிறேன்
அரவணைத்து கொள்.