தொடு திரை வழியே
கூர் தீட்டி
இதயம் பிளந்து
கூடும் காதல் நமது
இன்று பெண் பார்த்து
இரண்டு நாள் கழித்து கடிதம் போட்டு
வாய்த்த பொருத்தம் நமதில்லை
உன் கண்கள் மூடி
மெழுகின் ஒளியில்
பூக்கள் வீசிடும் கணவனில்லை
கை சுட்டு நீ செய்த
ஆசை சமையலின் ருசி பார்த்து
உச்சி முகரும் கணவனில்லை
இன்னது உனக்கு பிடித்தவை
இங்கே இவள் புன்னகை
இதோ இவளது கனவுகளென
தேடி கோர்க்கும் கணவனில்லை
உலகின் இறுதி அழகி நீயென
அங்கராகம் அற்ற அழகு விசையினை
வர்ணித்து வடிக்கும் கவிஞனும் நானில்லை
உன் காதலுக்கென
தகுதிகள் இல்லாவிடினும்
ஏனடி என் மேல்
இத்தனை காதல் உனக்கு
என் கவிதைகள்
நீ சூட பிறந்த மலர் மாலைகள்
என்னை செதுக்கும் சிலைக்கு
உடைந்த சிற்பியின் வரிகள்
நாளை நீ எதிர்நோக்கும் கணவனாக
இன்று மாற துடிக்கும்
காதலனின் அன்பு மடல்
கூர் தீட்டி
இதயம் பிளந்து
கூடும் காதல் நமது
இன்று பெண் பார்த்து
இரண்டு நாள் கழித்து கடிதம் போட்டு
வாய்த்த பொருத்தம் நமதில்லை
உன் கண்கள் மூடி
மெழுகின் ஒளியில்
பூக்கள் வீசிடும் கணவனில்லை
கை சுட்டு நீ செய்த
ஆசை சமையலின் ருசி பார்த்து
உச்சி முகரும் கணவனில்லை
இன்னது உனக்கு பிடித்தவை
இங்கே இவள் புன்னகை
இதோ இவளது கனவுகளென
தேடி கோர்க்கும் கணவனில்லை
உலகின் இறுதி அழகி நீயென
அங்கராகம் அற்ற அழகு விசையினை
வர்ணித்து வடிக்கும் கவிஞனும் நானில்லை
உன் காதலுக்கென
தகுதிகள் இல்லாவிடினும்
ஏனடி என் மேல்
இத்தனை காதல் உனக்கு
என் கவிதைகள்
நீ சூட பிறந்த மலர் மாலைகள்
என்னை செதுக்கும் சிலைக்கு
உடைந்த சிற்பியின் வரிகள்
நாளை நீ எதிர்நோக்கும் கணவனாக
இன்று மாற துடிக்கும்
காதலனின் அன்பு மடல்
No comments:
Post a Comment