Saturday 10 June 2017

மனைவிக்கு ஓர் மடல்

தொடு திரை வழியே
      கூர்  தீட்டி
இதயம் பிளந்து
 கூடும்  காதல் நமது

இன்று பெண் பார்த்து
இரண்டு நாள் கழித்து கடிதம் போட்டு
வாய்த்த பொருத்தம் நமதில்லை

உன் கண்கள் மூடி
மெழுகின் ஒளியில்
பூக்கள் வீசிடும் கணவனில்லை

கை சுட்டு நீ செய்த
ஆசை சமையலின் ருசி பார்த்து
உச்சி முகரும் கணவனில்லை

இன்னது உனக்கு பிடித்தவை
இங்கே இவள் புன்னகை
இதோ இவளது கனவுகளென
தேடி கோர்க்கும் கணவனில்லை

உலகின் இறுதி அழகி நீயென
அங்கராகம் அற்ற அழகு விசையினை
வர்ணித்து வடிக்கும் கவிஞனும் நானில்லை

உன் காதலுக்கென
தகுதிகள் இல்லாவிடினும்
ஏனடி என் மேல்
இத்தனை காதல் உனக்கு

என் கவிதைகள்
நீ சூட பிறந்த மலர் மாலைகள்
என்னை செதுக்கும் சிலைக்கு
உடைந்த சிற்பியின் வரிகள்
நாளை நீ எதிர்நோக்கும் கணவனாக
இன்று மாற துடிக்கும்
காதலனின் அன்பு மடல்


No comments:

Post a Comment