சிறகு முளைத்த
சிறு பறவை நான்
புயல் காற்றில் புலம் பெயர
கூட்டை தேடி அலைகிறேன்
உந்தன் மடியில் இடம் கிடைக்குமா?
பிறந்த பொழுது
அழுததாய் நினைவில்லை
உன்னை பிரியும்
ஒவ்வொரு கணமும் அழுகிறேன்
அத்தனை கவிதைகளும்
உன்னை சேரும் முன்
கண்ணீரால் நனைந்திருப்பதை அறிவாயா?
அன்பே அருகே வருவாயா
எந்தன் வாழ்க்கை பிழைதனை அழிப்பாயா
விண்ணும் மண்ணும்
மழையால் சேர்வது போல்
உன் ஈர முத்தம்
நம்மை சேர்ப்பது எப்போது?
நீ இருக்கும் இடத்தில்
தன்னிரக்கமும் இல்லை தாழ்வும் இல்லை
உனக்காய் விழித்திருப்பதாய்
சினமும் தேவையில்லை செல்லமே
எனக்காய் அத்தனை சுமைகளையும்
சுமக்க போகிறவள் நீயடி
என் ராணியின் மலரடிகளை
இந்த மனதில் வைத்து தாங்கிடுவேன்.
நெருப்பினை பற்றும் தீக்கஞ்சியாய்
நம் இருவரையும் பிணைத்து
குளிர் காய்கிறது காதல்.
தீக்கஞ்சி- Camphor
சிறு பறவை நான்
புயல் காற்றில் புலம் பெயர
கூட்டை தேடி அலைகிறேன்
உந்தன் மடியில் இடம் கிடைக்குமா?
பிறந்த பொழுது
அழுததாய் நினைவில்லை
உன்னை பிரியும்
ஒவ்வொரு கணமும் அழுகிறேன்
அத்தனை கவிதைகளும்
உன்னை சேரும் முன்
கண்ணீரால் நனைந்திருப்பதை அறிவாயா?
அன்பே அருகே வருவாயா
எந்தன் வாழ்க்கை பிழைதனை அழிப்பாயா
விண்ணும் மண்ணும்
மழையால் சேர்வது போல்
உன் ஈர முத்தம்
நம்மை சேர்ப்பது எப்போது?
நீ இருக்கும் இடத்தில்
தன்னிரக்கமும் இல்லை தாழ்வும் இல்லை
உனக்காய் விழித்திருப்பதாய்
சினமும் தேவையில்லை செல்லமே
எனக்காய் அத்தனை சுமைகளையும்
சுமக்க போகிறவள் நீயடி
என் ராணியின் மலரடிகளை
இந்த மனதில் வைத்து தாங்கிடுவேன்.
நெருப்பினை பற்றும் தீக்கஞ்சியாய்
நம் இருவரையும் பிணைத்து
குளிர் காய்கிறது காதல்.
தீக்கஞ்சி- Camphor
No comments:
Post a Comment