Sunday 11 June 2017

மனைவிக்கு ஓர் மடல்-2

டிசம்பர் நான்காம் திகதி
பத்து மணியளவில்
பதிணென் மல்லிகை சரத்தில்
நட்டுவைத்த ஒற்றை ரோஜாவென
பிறை சூடிய கங்காதரன் மடியில்
பாய்தோடும் அழகிய கங்கையென
என் தேவதை பிறந்தாள்

காட்டு ரோஜாவை தேடிக் கொள்ளும்
கருவண்ண தேனீயாய் சுற்றி வந்து
அவள் மனதினை கவர்ந்தேன்

சூறை காற்றில் தோற்றிடும்
மலர் மொட்டுகளை போல்
பூங்கொற்றில் சிரித்திடும் ஒற்றை மலர்
அவள் பால் மனம் சாய்ந்ததே

இருளடைந்த வான் நான்
முழு நிலவே எனை விலகி செல்லாதே
யார் முகம் நோக்கினும்
உன்னோடு மட்டுமே பேச தெரிந்த
மழலை நான்
மற்றோர் முகம் காண சொல்லி
தீவாய் பிரித்து காட்றாற்றில் விடாதே
எங்கேயோ உடைந்து போகும் இப்படகு

பிரிய சகியே
உன் மேல் எத்தனை காதல் தெரியுமா
அயர்ந்த விழிகள் உனக்காய் மட்டும்
விழித்திருந்து கனா காணும்
இதழ்கள் உனக்காய் மட்டும்
முத்தம் பொழியும்
இதயம் உனக்காய் மட்டும்
வாசல் திறக்கும்
மற்றோர் பாதை கூட செல்லாது
என் மனதை நீயே சிறை வைத்திருக்கிறாய்

மீண்டும் ஓர் முறை
எத்தகைய காதல் என வினவாதே
என்னை படைத்தவன் கூட
கூற இயலாது கவிதைகளில் மூழ்குவான்.

No comments:

Post a Comment