Saturday 6 May 2017

திரும்பி வா சகியே -2

ஆழி சூழ் உலகில்
ஆற்றின் துருவந்தனில் பிறந்த நம்மை
இன்று ஆழ்கடல் பிரிக்கிறது
காலத்தின் சுவரிடையே
வார்த்தை பாலம் கொண்டு வாழ்ந்தோம்
தவறிய வரிகளில்
துணை இழந்து தவிக்கிறேன் (நான்)

என் மீது சினமில்லை என கூறும்
புன்னகை துறந்த இதழ்கள்
"என்னிடம் எதுமில்லை பகிர" என முடித்து
எம்மை பிரிக்க துடிக்கும் மௌனம்
தனிமை சாலையில்
உன் துணையின்றி பிழையாய் திரிகிறேன்

உன் வார்த்தைகளை செவிகொண்டு
கேட்பதில்லை என்பது உன் குறை
உயிர் கேட்கும் ஓசை தனை
செவிகொண்டு நிறுத்துவதில்லை தோழி
நீ கதைக்கும் பொழுதினில்
இதயம் சிறகு விரிக்கும் அறிவாயா?

"நான் இன்றி போனால்
என் உடல் கரைந்தால்
காற்றோடு கலந்திட்டால் என் செய்வாய்"
என பழிக்காதே தோழி
மறந்தாலும் மறுத்தாலும்
நீ என்ற உண்மை தான் அழியுமா?
இந்த கவிதையின் ஓர்மை தான் தீருமா?
காலனென்ற பிரிவினை எதிர்கொள்ளும் வரை
என்றும் உன்னோடு இருப்பேன் தோழி

இவையனைத்தும் எம் கற்பனையென
நீ முடிக்க கூடும்
கவிஞன் என்னோடியிருப்பது
உன்னோடு கழித்த உண்மையான பொழுதுகள்
என் நிஜம் நீ
நெடுங்தொலைவு சூழ்கொண்டால்
உன் நினைவுகள் தானே என் புகலிடம்.

காட்டு தீயில் கரைந்திடா விறகா
பறவை பறந்திட மறுத்திடும் சிறகா
நட்பினுள் உன் கொடை அதிகா
மனிதருள் உன் குணம் அநகா
நீயின்றி மனம் தீகா
சொல்லின்றி மொழி பிறக்கா
சொல்லடி நீ கார்குழலி






1 comment: