Thursday 11 June 2015

ஊடல்

நீ என்னை திட்டி சென்றிருக்கலாம்
ஒன்றும் பேசாமல் சென்றதிற்கு பதிலாக..

எழுத்தாணி முனையில்
பதியத்துடிக்கும் மையை போல்
நிலத்தினை தழுவ காத்திருக்கும்
முதல் துளி மழையை போல்
காற்றின் வாசம் தேடும்
கூண்டு பறவையை போல்
இசையின் பால் கண்ணனோடு இசைந்த
ஆவின் தயை போல்

கண்மணி
உன் கை கோர்த்து
கவி பேச
கசியும் உயிர் பிடித்து
காத்திருக்கிறேன்...